Monday 25 July 2016

குழந்தையின்மை....

குழந்தையின்மை......
தாய்மை இறைவனின் வரப் பிரசாதம். பெண்மைக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு. எனவே குழந்தையின்மை பெண்களின் மனதிற்கும், உடலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
திருமணமாகி, ஒருவருடத்தில், அடிக்கடி உடலுறவு கொண்டும், கருத்தரிக்காமல் போனால், குழந்தையின்மை குறை என்று மருத்துவ ரீதியாக சொல்லப்படுகிறது. இயற்கை வைத்தியரிடம் போவது நல்லது.
குழந்தையின்மையும், ஆண்மை / பெண்மை குறைவும் ஒன்றல்ல. உடலுறவே மேற்கொள்ள முடியாத பாதிப்புகள் ஆண்மை / பெண்மை குறை எனப்படும். குழந்தையின்மை குறை ஆணிடமும் இருக்கலாம் இல்லை பெண்ணிடமும் இருக்கலாம்.
காரணங்கள் ( ஆண்)
விந்து குறைபாடுகள், விந்து செல்லும் பாதை அடைப்பு, விபத்தினால் பிறப்புறுப்பில் அடிபடுவது, பிறப்புறுப்புகளின் பிறவி குறைபாடுகள், பிறப்புறுக்களின் வளர்ச்சியின்மை இதர பொதுவான வியாதிகள்.
விந்து அசாதாரணமாக, இயற்கைக்கு மாறாக இருப்பது, குறைந்த அளவே உற்பத்தியாவது Oligospermia) அல்லது விந்துக்களே இல்லாமல் போவது (Azoospermia) அல்லது விந்து நகர முடியாமல், ஆணுறுப்பை அடையமுடியாமல் போவது.
ஆணுறுப்புகளுக்கு ‘சூடு’ – வெப்பம்’ ஆகாது. உடல் வெப்பநிலையை விட ஆணுறுப்புகளில், உஷ்ணம் குறைவாக இருக்கும். அதிக வெப்ப பாதிப்புகள், விரைகள் Testis) பிறவியிலிருந்தே ‘கீழ் இறங்காமல் அடிவயிற்றிலேயே தங்கி விடுவது, பருத்துப் போய், புடைத்து போன இரத்தக் குழாய்கள், நாட்பட்ட ஜீரம் இவைகள் விரைகளின் சூட்டை அதிகரிக்கும்.
ஹார்மோன் குறைபாடுகள் – அதுவும் அட்ரீனலின், பிட்யூடரி சுரப்பிகளின் கோளாறுகள் விந்துவை உற்பத்தியாவதை பாதிக்கும்.
சுற்றுப்புற மாசுகள், ரசாயன நச்சுப்பொருட்கள் சேர்ந்த பொருட்கள் (டியோடரண்ட், ஷாம்பு, ஆஃடர்ஷேவ் லோஷன்) விந்துவை பாதிக்கின்றன.
பிறவிக் கோளாறுகளால் ‘செக்ஸ் குரோமோசான்கள்’ விந்து உற்பத்தியில் குறைபாடை ஏற்படுத்தும்.
• ‘மம்ஸ் (Mumps) போன்ற நோய்கள்.
ஸ்டிராய்ட் மருந்துகள் ஹார்மோன் அளவுகளை குறைத்து விந்து உற்பத்தியில் தலையிட்டு, பாதிப்பை ஏற்படுத்தும்.
அபூர்வமாக விந்து முன்னே செல்லாமல், பின்னால், ‘ரிவர்ஸில்’ சென்று விடும். நீரிழிவு நோயாளிகளுக்கும், இடுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் இது ஏற்படலாம்.
பெண்களின் குறைபாடுகள்
மாதவிடாய் பிரச்சனைகள். மாதம் ஒரு முறை “சினைமுட்டை” வெளியாகாமல் போவது. ‘ப்ரோஜிஸ்டெரோன்’ Progesterone) ஹார்மோன் சுரக்காமல் போவது.
இந்தProgesterone ஹார்மோன், மாதா மாதம் கருப்பை பையின் உட்படையை (lining), கெட்டியாக்கும். முட்டையின் வரவை எதிர்நோக்கி இந்த வேலையை அது செய்கிறது. மூளை, பிட்யூட்டரிக்கு தேவையான “கோனாடோட்ரேபின்” (Gonadotropin) என்ற ஊக்குவிக்கும் ஹார்மோனை அளிக்க முடியாமல் போனால், ‘முட்டை’ உற்பத்தியாகாது.
கர்ப்பப்பையின் ‘வாய்’ பாகம் தொற்று நோயால் பாதிக்கப்படுவது அடைத்துக் கொள்வது, கர்ப்பப்பை இடம் மாறுவது. சோகை, போன்றவை.
தைராயிடு, அட்ரீனலின் சுரப்பிகளின் கோளாறுகள், நீரிழிவு நோய், அதிக உடல் பருமன்.
சீரான மாதவிடாய் இல்லாமை, மாதவிடாய் போது வலி, குறைந்த உதிரப்போக்கு, முட்டை கருப்பைக்கு வரும் பாதையில் (Fallopian Tubes) அடைப்பு. இதனால் முட்டை கருப்பையை சேரமுடியாமல் போகும்.
சாதாரணமாக பெண்களின் கருப்பையில் இருக்கும் சளி கெட்டியாகவே இருந்துவிடும். விந்துவால் உள்ளே பிரவேசிக்க முடியாது. தவிர தொற்றுநோய்க்காக கொடுக்கப்படும் ஆன்டி பயாடிக் மருந்துகள் விந்துவையும் நாசம் செய்து விடலாம்.
பெண்களின் ஜனனேந்திரிய உறுப்புகளின், பிறவிக்கோளாறுகள் கருப்பப்பை, அதன் பாதைகள் இவற்றில் “கட்டி” (Fibroids) ஏற்படுதல்.
இந்த குறைபாடுகளை கண்டறிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வகை நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் சிறந்த மருத்துவம் இருக்கின்றன. சித்த மருத்துவம், அவற்றிற்கு உரிய தனித்தன்மையில், நோயின் காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்குத் தகுந்தவாறு செயல்பட்டு நோயின் அடிப்படைக் காரணத்தை விலக்கி நோயிலிருந்து விடுதலை அளிக்கும்.

சித்த மருந்துகள் இயற்கையான மூலப் பொருட்களிலிருந்து தயாரிக்கப் படுவதால் அவை எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் நோயிலிருந்து நூறு சதவிகிதம் விடுதலை அளிக்கின்றன. பயன்படுத்திப் பயன் பெறுங்கள்.

Friday 18 September 2015

தாது விருத்தியாக /நரம்புத்தளர்ச்சி நீங்க லேகியம்

தாது விருத்தியாக /நரம்புத்தளர்ச்சி நீங்க லேகியம்
1.அத்திப்பழம் 100 கி
2.
சாதிக்காய் 10 கி 
3.
சாதிபத்திரி 10 கி
4.
ஏலரிசி. 10 கி.
5.
மாசிக்காய் 10 கி 
6.
அதிமதுரம் 10கி
7.
வாளுலுவை அரிசி 10 கி
8.
வாய்விளங்கம் 10கி.
அத்திப்பழத்தை 1லிட்டர் பாலிலிட்டு பாதியாக சுண்டியவுடன் 750 கி சர்க்கரை விட்டுப் பாகாக்கிய உடன் மேற்சொன்ன சரக்குகளின் சூரணங்களைச் சேர்த்து 7 கோழி முட்டைகளை கூட்டிக் கிண்டி அத்தோடு கோதுமை மாவு (முளை கட்டியது) விளாம்பிசின் 25கி சேர்த்து கிளறி இறக்கவும். இந்த லேகியம் விந்துப் பெருக்கத்தை ஏற்படுத்தும். உஷ்ணம் ,வெட்டை நீங்கும்.
மேற்சொல்லப்பட்ட லேகியம் உயரிய தரத்தில் எங்களிடம் கிடைக்கும். விவரங்களுக்கு dr prabhu 9488472592.


‎வெண்குட்டத்திற்கு எளிய மருந்து

‪#‎வெண்குட்டத்திற்கு எளிய மருந்து #$
கருந்துளசி, (சாதாரண துளசி இதற்குப் பயன்படாது ),சங்கிலை,மருதாணியிலை,நிலவேம்பு,வில்வ இலை,வல்லாரை இலை இவைகளை எல்லாம் பசுமையாகப் பறித்து வந்து நிழலில் தரைபடாமல் உலர்த்தவும் . இவைகளை இடித்து சலித்து சூரணமாக்கி காலை ,மாலை ,இரவு,ஒரு ஸ்பூன் நீருடன் உட்கொள்ளவும். 
சில மாதங்களில் இந்நோய் பலருக்கு தீர்ந்திருக்கிறது


மூட்டு வலி

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே.
இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது. மூட்டுத் தேய்மானம் மூட்டழற்சி, முடக்குவாதம் என இரண்டு வகைப்படும்.


மூட்டழற்சி:

இது பெரும்பாலும் வயதானவர்களுக்கேவரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.

முடக்குவாதம்:

இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

மூட்டழற்சியின் அறிகுறிகள்:

நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.

முடக்குவாதத்தின் அறிகுறிகள்:

இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.

காரணம்:

முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம். முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரணமாகும். பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.

கைவைத்தியம்:

1.
நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2.
ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3.
இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4.
வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5.
ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இதுஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.

6.
இரண்டு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கப் ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

7.
ஒரு டேபிள்ஸ்பூன் பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.